Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / தினமும் முதியோர்களுக்கு உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!
MyHoster

தினமும் முதியோர்களுக்கு உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!

தானத்தில் சிறந்தது அன்னதானம். இந்த அன்னதானத்தை 378 நாளாக சேவை மனப்பான்மையுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏழை எளிய முதியோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த 378 வது நாள் அன்னதானத்தை திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன் மற்றும் செயலாளர் சக்கையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று “மாற்றுத்திறனாளிகளுக்கு விருந்து” வழங்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 40- க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் திருமங்கலம் கவுன்சிலர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஒரு வருடமாக அன்புடன் உபசரித்து உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளை மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் மனதார பாராட்டினர்.

இந்நிகழ்வில் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சித்ரா ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி, கௌரவ ஆலோசகர்கள் காளியப்பன், அழகர்சாமி, டிரஸ்டி குருபிரசாத், அன்னபூரணி மற்றும் நிர்வாகிகள் லோகேஸ்வரி, அய்யம்மாள், மலர்விழி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி நன்றியுரை கூறினார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES