
மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன் ஜி சிறப்பாக செய்திருந்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மண்டல் தலைவர் மாணிக்கவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,மண்டல் பொதுச் செயலாளர் சுரேஷ், பாண்டியராஜன், மண்டல் பொருளாளர் குட்டி என்ற மணிவண்ணன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்களையும் அவர்கள் வழங்கினர்.