
மதுரையில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்
விருதுநகர் மாவட்டத்திற்கு ரூபாய் 2000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க.மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை மார்ச் 31ம் தேதி வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு செல்கிறார்.
அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மதுரை அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட வியாபார நிறுவனங்களுக்கு பாஜ.க.ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், மதுரை மாவட்ட ஊடக பிரிவு மாவட்ட தலைவர்கள் செல்வமாணிக்கம் ,ரவிசந்திரபாண்டியன், காளிதாஸ் நிர்வாகிகள் பாஸ்கர் குமார் உள்பட பலர் வழங்கினர்.