
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே உள்ள சண்முகம் திருமண மண்டபத்தில், தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கம் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில தலைவி கடலூர் சாந்தி, துணை தலைவி மேரி தலைமை வகித்தனர். சென்னை மாவட்ட தலைவர் திராவிடன் முன்னிலை வகித்தார்.
இதில் கலாவதி, கலைச்செல்வி, செல்வி.சாஸ்திரி, பாண்டிச்சேரி வசந்தி,சுமதி, லெட்சுமி,தேவி, K.R லெட்சுமி, மதுரை சுப்புலெட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.
முன்னாள் மத்திய உளவுத்துறை அதிகாரி திரைப்பட நடிகர் வடுகபட்டி எம்.செல்வம், பிசிகரன், மாநில தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜேந்திரகுமார், அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர் K.R வெங்கட் சத்திய மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி, , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் விஜயராம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம், சென்னை மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் கேஸ்டிங் டைரக்டர் மதுக்கூர் சத்யா நன்றியுரை கூறினார்.