
விசாகப்பட்டினத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
ஆந்திரா பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினத்தில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகி பேட்டையில் 3 மாடி கட்டிடம் இடிந்து திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது .
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்துள்ளனர் இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.