Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மோடி குடும்பப்பெயர் பற்றி சர்ச்சை கருத்து: ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் 23-ந் தேதி தீர்ப்பு
MyHoster

மோடி குடும்பப்பெயர் பற்றி சர்ச்சை கருத்து: ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் 23-ந் தேதி தீர்ப்பு

மோடி குடும்பப்பெயர் பற்றி சர்ச்சை கருத்தில் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட் 23-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

சூரத்,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், ”எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று கேட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக சூரத் கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டதாக அவர் கூறியிருந்தார்.

சூரத் கோர்ட்டில் கடந்த 17-ந் தேதி இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்தது. 23-ந் தேதி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பு அளிக்கிறார். அன்றைய தினம் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராவார் என்று அவருடைய வக்கீல் கிரித் பன்வாலா தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES