Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் / மதுரை கே.புதூர் காந்திபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.!
MyHoster

மதுரை கே.புதூர் காந்திபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர்.பாரீஸ் வழிகாட்டுதலின்படி
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து ஏழை எளியோர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையில், மதுரை கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

இதில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா, துணைச்செயலாளர் பஸ்ஸ்டாண்ட் அசோக்,

மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
பிரகாஷ்,ஷேக் அப்துல்லா, பால் முனீஸ்வரன், மணிகண்டபிரபு, கவிஞர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி.நாச்சியம்மாள், துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் வீரமணி பிரபு, ரமேஷ் காந்தி தங்கப்பாண்டி, ஜெயபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES