Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரை மேல சித்திரை வீதியில் விளக்குத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா திறப்பு விழா.!
MyHoster

மதுரை மேல சித்திரை வீதியில் விளக்குத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா திறப்பு விழா.!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற விளக்குத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா திறப்பு விழா நடைபெற்றது.

தொழிலதிபர் துரைராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர்கள் இஸ்மாயில் புகாரி மற்றும் காஜாமைதீன் ஆகியோர் வரவேற்றனர்.

இதுகுறித்து உரிமையாளர் காஜா மைதீன் நம்மிடம் கூறுகையில்:-
மதுரை மாநகர் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற விளக்கத்தூண் ஹனிபா ஜிகர்தண்டா கிளையை மீனாட்சி அம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் புதிதாக திறந்து உள்ளோம்.

ஜிகர்தண்டாவை தனிச்சுவையுடன் வழங்குவது எங்கள் சிறப்பு. மதுரை மக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருவதற்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அது போல் எங்களது மேலச்சித்திரை வீதி கிளைக்கும் மதுரை மக்கள் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். என கூறினார்

திறப்பு விழா சலுகையாக 2 ஜிகர்தண்டா அல்லது ஃபலுடா வாங்கினால் ஒன்று இலவசம். இந்த சலுகை (18/3/2023) முதல் (20/03/2023) வரை மூன்று நாட்கள் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES