Wednesday , May 31 2023
Breaking News
Home / உலகம் / தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக ஏழை, எளியோருக்கு அன்னதானம்.!
MyHoster

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக ஏழை, எளியோருக்கு அன்னதானம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர்.பாரீஸ் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையிலும், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் முன்னிலையிலும், மதுரை கோரிப்பாளையம் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

பின்னர் கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா, துணைச்செயலாளர் பஸ்ஸ்டாண்ட் அசோக், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், ஷேக் அப்துல்லா, பால் முனீஸ்வரன், மணிகண்டபிரபு, கவிஞர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி.நாச்சியம்மாள், துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் வீரமணி பிரபு, ரமேஷ் காந்தி தங்கப்பாண்டி, ஜெயபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகை பூவில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES