
இந்நிலையில் 360-வது நாளான இன்று சனிக்கிழமை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் நகர்மன்ற 23-வது வார்டு உறுப்பினர் அமுதா சரவணன் தலைமையேற்று 60-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன், துணைச் செயலாளர் எஸ்.எம் ரகுபதி, அறங்காவலர்கள் குருபிரசாத்,அன்னபூரணி, பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இடைவிடாமல் 360-நாளாக ஏழை எளியோர்களுக்கு உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.