Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / தொடர்ந்து இடைவிடாமல் 360 நாளாக உணவு வழங்கி வரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!!
MyHoster

தொடர்ந்து இடைவிடாமல் 360 நாளாக உணவு வழங்கி வரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தினமும் ஏழை, எளியோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் 360-வது நாளான இன்று சனிக்கிழமை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் நகர்மன்ற 23-வது வார்டு உறுப்பினர் அமுதா சரவணன் தலைமையேற்று 60-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன், துணைச் செயலாளர் எஸ்.எம் ரகுபதி, அறங்காவலர்கள் குருபிரசாத்,அன்னபூரணி, பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இடைவிடாமல் 360-நாளாக ஏழை எளியோர்களுக்கு உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES