
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் சம்பந்தமான பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளிருந்து
300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சீர்காழி – எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் புலவர் பனசை. மூர்த்தி, கே.வி.ராதாகிருஷ்ணன் நிர்வாகி – விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பேராசிரியர் சு.வீழிநாதன், கி.இராஜா தாளாளர்- சாயிராம் கல்விக்குழுமம் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிவ.அன்பழகன் – செயலர், திருக்குறள் பண்பாட்டுப் பேரவை, தலைவர். வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகிக்க, தொகுப்புரையினை வெ.அகோரமூர்த்தி அவர்களும், நிகழ்ச்சியில் அ.இராமநாதன் , எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம்,
காழி.கோ.வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா
ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நன்றியுரையினை நந்த.இராசேந்திரன்- து.செயலர் கூறினார்.