
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பி.டி.ஆர் ஹோட்டலில் தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் அவர்களின் தலைமையில், நிர்வாகிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் முனியசாமிக்கு அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு,மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர்.செல்வகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.பிச்சைவேல், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில செயலாளர் கீதாமுருகன்,தேசிய செயலாளர் மீரான் கனி, மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில இணைச்செயலாளர்கள் ரகுபதி, ஜெகநாதன், மாநில செயலாளர் குசலவன், மாநில சட்ட ஆலோசகர்
சத்தியமூர்த்தி, மாநில துணைச்செயலாளர் பெரியசாமி,மாநில மகளிரணி துணைத்தலைவி குருலெட்சுமி, மாவட்ட ஆலோசகர் ஆறுமுகம்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கராஜ், இணைச் செயலாளர்கள் முருகேஷ்பாண்டி, ராமன்,மாவட்ட துணைத்தலைவர்கள் ஷேக் அப்துல்லா, ராஜா,மணிகண்ட பிரபு,இணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி , அனிதா ரூபி, இளமி நாச்சியாம்மாள், மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, துணைத்தலைவர் அசோக்குமார், கிழக்கு தொகுதி தலைவர் கார்த்திகேயன், சிவகங்கை மாவட்ட தலைவர் ராஜ்குமார், சுந்தர், செயலாளர் விஜய கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.