Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆவின் அருகே அதிமுக வடக்கு 5-ஆம் பகுதி செயலாளர் வக்கீல் அசோகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
MyHoster

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆவின் அருகே அதிமுக வடக்கு 5-ஆம் பகுதி செயலாளர் வக்கீல் அசோகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தது செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டும், மதுரை ஆவின் பால் பண்ணை அருகே அதிமுக வடக்கு 5ம் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பஸ், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

முன்னதாக ஆவின் முன்பு உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்க.!! கழக தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வாழ்க.!! வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க.!! மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ அண்ணன் வாழ்க என உற்சாகத்துடன் கோஷமிட்டனர்.

இவ்விழாவில் ஆவின் தலைவர் பாண்டி, ஆவின் செயலாளர் பழனிச்சாமி, ஆவின் பொருளாளர் வேல்முருகன், இணைச் செயலாளர் மானகிரிராஜா, துணை செயலாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் எம்ஜிஆர் சக்திவேல், ஆவின் முகவர் சந்திரன், வடக்கு 5ம் பகுதி வட்டக்கழக செயலாளர்கள் கே.கே.நகர் மணி, முகமது ஷாமாஸ், ராமச்சந்திரன், தனபால், பாண்டியராஜன், முத்துக்குமார், இளைஞரணி பகுதிச் செயலாளர் பழக்கடை சுந்தர், குமார், ராமசீனிவாசன், கிருஷ்ணப்பாண்டி, ஆறுமுகம், மானகிரி சுகுமார், அய்யாவு,ஆட்டோ முத்துச்சாமி, மோகன், வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES