Wednesday , May 31 2023
Breaking News
Home / உலகம் / ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவர் கவிதாவுக்கு அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
MyHoster

ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவர் கவிதாவுக்கு அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஈரோட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் கொரோனா காலகட்டத்தின் போது ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். மேலும் கோயில்களில் திருப்பணியும் செய்து வருகிறார். மற்றும் பல்வேறு பதவி வகித்து வருகிறார்.


அந்த வகையில் மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது,

இவ்விழாவிற்கு தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் தலைமை வகித்தார், மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு, மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.பிச்சைவேல், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இவ்விழாவில் ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவராக நியமனம் செய்யப்பட்ட கவிதாவுக்கு
தேசிய அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதத்தை தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விசிட் செய்த MSME அகில இந்திய சேர்மன்.!

MSME அகில இந்திய சேர்மன் டாக்டர் முத்துராமன் மதுரை மாவட்டத்தில் உள்ள மல்லிகை பூவில் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES