Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் பெட்கிராட் கூட்ட அரங்கில் மனித நேய வார விழா.!
MyHoster

மதுரையில் பெட்கிராட் கூட்ட அரங்கில் மனித நேய வார விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட தொழில் மையம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்திய மனித நேய வார விழா நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினர்.

பெட்கிராட் தலைவர் சுருளி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர்கள் ராஜசேகரன், சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் துவக்க உரையாற்றினார். மாவட்ட தொழில் மைய துணை பொது மேலாளர் திருமதி ஜெயா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உதவி இயக்குனர் என்.எஸ்கிருஷ்ணன் மனிதநேயம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்வில் பெட்கிராட் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பயிலும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES