Monday , June 5 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் ஆத்ம யோகாலயா சார்பாக மாணவ, மாணவிகள் புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.
MyHoster

மதுரையில் ஆத்ம யோகாலயா சார்பாக மாணவ, மாணவிகள் புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆத்ம யோகாலயா சார்பாக புதிய சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியாக யோகா பயிலும் மாணவ, மாணவியர்கள் ஒன்றாக இணைந்து சந்திர நமஸ்காரம் யோகா கலையை நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு சிவயோகி சிவசண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெகன்நாத், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச் செயலாளர் ஆத்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மாவட்ட தலைவர் சண்முகவேல், மருத்துவர்கள் ஆர்த்தி, பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் நீலன், காந்தி சிலை பராமரிப்பு குழு தலைவர் தேனூர் சாமிக்காளை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆத்ம யோகாலயா செயலாளர் ஸ்ரீதேவி, நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் விஜயா ஆகியோர் செய்திருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES