
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் மகிழ்ச்சியுடன் நடத்திய பல்வேறு உலகச் சாதனை நிகழ்ச்சியில் கவிஞர்களுக்கு “குறள் வெண்பா” எழுதும் உலக சாதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் “ஐந்து நிமிடத்தில் ஐந்து குறள் வெண்பா புதுக்கவிதை வடிவில் எழுதி” கவிஞர் பாக்கி முதல் கவிஞனாக தேர்வாகி “சிகரம் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் நிறுவநர், செயலாளர் திருமதி வெண்பா பாக்கியலட்சுமி, தலைவர் கவிஞர் மரியடக்லஸ், முனைவர் தமிழ்மகன் ப.இளங்கோ, கலைமாமணி சொல்லின் செல்வர். ஆவடி குமார், கலைமாமணி முனைவர் ஜாக்குவார் தங்கம், கலைமாமணி கவிஞர் ஏர்வாடி.எஸ். இராதாகிருஷ்ணன், கலைமாமணி இசை அமைப்பாளர் தீனா, முனைவர் பாவலர் திருமதி சரஸ்வதி பாஸ்கரன் ஆகியோர் வெற்றி பெற்ற கவிஞர் பாக்கி அவர்களுக்கு சிகரம் உலகச் சாதனை சான்றிதழ்,கேடயம் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டினர்.
உலக சாதனை படைத்த கவிஞர் பாக்கி அவர்களுக்கு வளைகுடா வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.