
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டம் கண்ணமங்கலம் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர் தியாகு அவர்கள் திருவண்ணாமலை ஏழுமலை அவர்களிடம் தொழிலாளர்கள்
அடங்கிய படிவங்களை வழங்கினார்கள்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில்:–
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் சென்னை மாநகரில் மற்றும் அதன் சுற்று புரத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டாக இணைந்து பட்டியல் மற்றும் படிவங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு இளைய தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாண்புமிகு மின்துறை அமைச்சர் மற்றும் உயர்திரு. மின்வாரிய சேர்மன் விரைவில் முதல் கட்டப்பட்டியல் – 6568 தொழிலாளர்கள் அடங்கிய பட்டியலை ஒரு வார காலத்திற்குள் ஒப்படைக்க உள்ளோம். இந்தக் கூட்டத்தில் சேலம் மகேந்திரன் தூத்துக்குடி பாலா என்ற பாலசந்தர் திருவண்ணாமலை ஏழுமலை திருவள்ளூர் எழில், பாலா மற்றும் சந்தனகுமார் வடசென்னை தாமரைக்கண்ணன், கனகராஜ், தங்கராஜ் மற்றும் அரவிந்த் தூத்துக்குடி முஸ்தபா மதுரை ராஜா மற்றும் நூற்றுக்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.என கூறினர்.