தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை விரைவில் நிரந்தர படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கொடைக்கானல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.