
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், பழனிவேல், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் முரளிபாஸ்கர், மக்கள் பணி மேற்கு தொகுதி பொறுப்பாளர் முனைவர் பிச்சைவேல், பரவை மண்டல் பார்வையாளர் ரமேஷ்கண்ணன், மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் இளங்கோமணி, வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் வடமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், வார்டு தலைவர்கள் சேது, திருப்பதி, முருகேசபாண்டி, செல்வி கிருஷ்ணன் உள்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவர்கள் டாக்டர் கலையரசன், டாக்டர் கணேஷ்பாபு, மற்றும் விக்னேஷ், வேணுகோபால், கார்த்திக் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்