Monday , June 5 2023
Breaking News
Home / உலகம் / கொரோனா ஊரடங்கின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது.!
MyHoster

கொரோனா ஊரடங்கின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது.!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி ஆகியோர் வழங்கிப் பாராட்டினார்கள்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES