
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.பி திருமால் – பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் திருமருது (வயது 3) பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கோ.புதூர் தாமரை தொட்டி அருகே உள்ள பூங்காவில், ஏழை,எளிய மாற்றுத்திறனாளிகள் 15க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை “மாற்றம் தேடி” பாலமுருகன் அவர்களின் தலைமையிலும், சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் முத்துராமன், பாரதி,அசோக்குமார், மூர்த்தி, பூசாரி மகாலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருமால் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்