
மதுரை ஆரப்பாளையத்தில் 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராம் ஏற்பாட்டில், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி பொதுமக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் கனி, கவிதா மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.எஸ்.மாறன், சீனிரமேஷ், மூவேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.