
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில், பழங்காநத்தம் அருகே உள்ள நேருநகர் பகுதியில் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மாரி.சக்கரவர்த்தி, பழங்காநத்தம் மண்டல் தலைவர் மணிவண்ணன், ஐ.டி.விங் மாவட்ட செயலாளர் ஆர்.கே.பிரகாஷ், 62-வது வார்டு தலைவர் முனைவர் பிச்சைவேல், 74-வது வார்டு தலைவர் முருகேச பாண்டியன், 68-வது வார்டு தலைவர் சசிக்குமார், 72-வது வார்டு தலைவர் வயக்காட்டு சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.