Monday , June 5 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் நோபல் உலக சாதனை படைத்த சகோதரிகள்: குவியும் பாராட்டு.!
MyHoster

மதுரையில் நோபல் உலக சாதனை படைத்த சகோதரிகள்: குவியும் பாராட்டு.!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இந்துமதி,உடல் கல்வி இயக்குனர் வசந்தி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் முன்னிலையில், பதினெட்டாம்படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்புச்செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் ரெக்கார்டு புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் தலைமையிலும், நடந்த நோபல் உலக சாதனை முயற்சியில், மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், வசந்தி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி பவித்ரவேலா 2 1/2 அடி உயரம் கொண்ட பொய்க்காலில் நின்று இடைவிடாமல் நடந்து கொண்டே ஒற்றை சிலம்பத்தை 2 மணி நேரம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் பவித்ரவேலாவின் இளைய சகோதரி அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவ்யாஸ்ரீ யும் இரண்டு மணி நேரம் இடைவிடாது ஒற்றை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த சகோதரிகள் இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கரிமேடு ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.!

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.சி. பள்ளி மைதானத்தில் வைகை சிலம்பம் பள்ளி சார்பாக நோபல் உலக சாதனை நிகழ்ச்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES