Saturday , June 3 2023
Breaking News
Home / Politics / Dmk / வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்; சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடக்கிறது
MyHoster

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்; சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடக்கிறது

சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை, சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. இன்று வேளாண் பட்ஜெட் அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். மறுநாள் புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபைக்கு விடுமுறை. பட்ஜெட் மீது விவாதம் 23-ந்தேதி மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர். 24-ந்தேதி 2-ம் நாள் பட்ஜெட் மீதான விவாதம்.

25, 26-ந்தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை. 27-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம், 28-ந்தேதி பட்ஜெட் மீது உறுப்பினர்கள் பேசிய விவாதத்திற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கிறார். மானியக்கோரிக்கை பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதமும் தொடர்ச்சியாக நடக்கிறது. அதன்படி, 29-ந்தேதி காலை நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாலை இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைதுறை, போக்குவரத்து துறை. 30-ந்தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, 31-ந்தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), தகவல் தொழில் நுட்பவியல். 2-ந்தேதி அரசு விடுமுறை. 3-ந்தேதி பேரவை கூட்டம் இல்லை. 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை. 5-ந்தேதி வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், 6-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை.

7-ந்தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை, 8-ந்தேதி அரசு விடுமுறை, 9-ந்தேதி அரசு விடுமுறை, 10-ந்தேதி காலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தமிழ் வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாலையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு. வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரபதிவு. 20-ந்தேதி காவல்துறை 11-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல், 12-ந்தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, மாலையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை. 13-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம், மாலையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அரசு விடுமுறை. 15, 16 அரசு விடுமுறை, 17-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 18-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 19-ந்தேதி சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை, மாலையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றங்கள். 20-ந்தேதி காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை), தீயணைப்புத்துறை 21-ந்தேதி காவல், தீயணைப்புத்துறை மீதான விவாத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை மற்றும் அறிவிப்புகள், அரசினர் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றலும், ஏனைய அரசினர் அலுவல்கள். பேரவை காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் கூடும்.

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES