Friday , March 29 2024
Breaking News
Home / கரூர் / பாரத சாரண சாரணியர் இயக்கம்* சார்பாக கரூர் மாவட்டத்தில் (18.12.21) *மாநில ஆளுநர் விருதிற்கு* சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம்
MyHoster

பாரத சாரண சாரணியர் இயக்கம்* சார்பாக கரூர் மாவட்டத்தில் (18.12.21) *மாநில ஆளுநர் விருதிற்கு* சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம்

*பாரத சாரண சாரணியர் இயக்கம்* சார்பாக கரூர் மாவட்டத்தில் (18.12.21) *மாநில ஆளுநர் விருதிற்கு* சாரண, சாரணியர் குழந்தைகளுக்கு தேர்வுக்கான முகாம் இன்று புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் *மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரான திரு மதன்குமார்* அவர்களின் உத்தரவின் பேரில் *மாவட்ட ஆணையர் திரு விஜயேந்திரன்* அவர்களின் நெறிக்காட்டுதலில் மாவட்டச் செயலர் திரு ரவிசங்கர் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.இத்தேர்வுமுகாமில் *சாரணர்களுக்கு *முதன்மை தேர்வாளராக திருப்பூர் மாவட்டத்திலிருந்து திருமதி சுதா லக்ஷ்மி* அவர்களும் *சாரணியர்களுக்கு முதன்மை தேர்வாளராக குன்னூர் மாவட்டத்திலிருந்து திருமதி மஞ்சுளா* அவர்களும் மாநில சாரண சாரணியர் நிர்வாகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தேர்வுக்கு கரூர், குளித்தலை மற்றும் பரணிபார்க் கல்வி மாவட்டங்களிலிருந்து தேர்வாளர்கள் மாணவர்களை தேர்வு செய்தனர். *இம்மாபெரும் தேர்வுமுகாமில் 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்சார்ந்த சாரண சாரணியர் பங்குபெற்றனர்*.இதற்கு கரூர் மாவட்ட சாரண சாரணிய நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் சாரண-சாரணிய ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்களும் உறுதுணையாக இருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ! 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்! தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் தேர்வாக தமிழ்த் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES