
மதுரையில் வாஸன் கண் மருத்துவமனையின் கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவை மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்
மதுரை,செப்.09-
மதுரை அண்ணாநகர் வாஸன் கண் மருத்துவமனையில் பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் அதிநவீனமான கான்டூரா லேசர் சிகிச்சை பிரிவை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்.வசந்த் தொடங்கி வைத்தார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாஸன் கண் மருத்துவமனையின் முதன்மை தலைமை மருத்துவர் கமல்பாபு கூறுகையில் “கான்டூரா லேசிக் சிகிச்சை பிரிவு சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக தென் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையில் கொண்டு வரப்பட்டு உள்ளது,
மிக துல்லியமாக கண் சிகிச்சை அளிக்க கான்டூரா லேசர் மிஷின் உதவிகரமாக இருக்கும், இந்த இயந்திரத்தை கொண்டு 2 கண்களிலும் 7 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளலாம், இந்த அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளும் நோயாளிகள் 1 மணி நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்,
மேலும் கண்களை தொடாமலேயே அறுவை சிகிச்சை செய்வது தான் இயந்திரத்தின் சிறப்பாகும்” என கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்