Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!!
MyHoster

மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!!

பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்
1)தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் முனைவர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும்,


2)ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை இலவசமாக அளித்து வரும் முனைவர் ஜாபர் ஷெரீப்க்கு சிறந்த சமூக சேவகர் விருதும்,

3)வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்களின் உரிமைக்காக போராடிவரும் ஆப்ரின் ஷேக்குக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும்,


4)கடந்த10 ஆண்டுகளுக்கு மேல் பறவைகளுக்கு உணவும் நீரும் வழங்கி வரும் சாகுல் அமீத்யிக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதும்,


5.சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் அம்ஜத் உசேனுக்கு சிறந்த நல்லாசிரியர் விருதை, பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகீர்உசேன் வழங்கி கௌரவித்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES