Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் நியமனம்.!!
MyHoster

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் நியமனம்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலின்படி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன் அவர்கள் கூறுகையில்:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சொல்லின் செல்வர் மரியாதைக்குரிய ஐயா கே.எஸ்.அழகிரி அவர்களுக்கும் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள் எஸ்.பி வரதராஜன், கே.ஜி.ரமேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பால்ஜோசப் உள்பட
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்ட மறைந்த முன்னாள் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் மாமேதை பி.ஜே காமராஜ் அண்ணன் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், காங்கிரஸ் கட்சிக்காக என் உயிர் மூச்சு உள்ளவரை, தொடர்ந்து பணியாற்றுவேன்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தொடர்ந்து பாடுபடுவேன் என அவர் கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES