Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
MyHoster

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கினங்க, பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் ஆலோசனைப்படி, பேராசிரியர் ராம.சீனிவாசன் மற்றும் புதூர் மண்டல் பொறுப்பாளர் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஜி ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மண்டல் தலைவர் மாணிக்கம் தலைமையில்
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நீர் மோர் பந்தல், இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், ஜோதி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரேஷ், மணிவண்ணன், மீனா,ராஜ்குமார், ஜனார்த்தனன், ராம்குமார், ஹரி, துரைமாறன், ஆதிஸ்வரன், கந்தன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES