Saturday , December 9 2023
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நோபல் உலக சாதனை புரிந்த மாணவி அபிநிதா.!
MyHoster

மதுரையில் நோபல் உலக சாதனை புரிந்த மாணவி அபிநிதா.!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த சிலம்புச்செல்வன் மாரிமுத்து- கல்யாணி ஆகியோரின் மகள் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி அபிநிதா (வயது 14) இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES