Saturday , April 1 2023
Breaking News
Home / கரூர் / பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…
MyHoster

பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி குழந்தைகள் சுகாதாரத்துடன் கல்வி கற்க முடியுமா? அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் சுகாதாரத்துடன் வாழ முடியுமா? என்று ஊர்மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளப்பட்டி அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கை @ TNEB

கரூரில் தற்போது இயங்கி வரும் TNEB செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகம் தற்போது க .பரமத்தி கொண்டு செல்ல தீவிர முயற்சி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES