Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 5)

உலகம்

World

மதுரையில் பீ.கே.மூக்கையா தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பீ.கே மூக்கையா தேவர் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பகவதி, மண்டல தலைவர் நாகராஜ்தேவர், மாநில துணைத்தலைவர் முத்துராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள் வைகை.பத்மநாபன், சாலை.பிரபாகரன், ஒச்சாத்தேவர், எஸ்.ஆர்.பாண்டி, வழக்கறிஞர் மணிகண்டன், செல்வராஜ், அர்ஜூன், தமிழரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பீ.கே.மூக்கையா தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பீ.கே மூக்கையா தேவர் சிலைக்கு பாஜக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

கல்வித்தந்தை பீ.கே மூக்கையா தேவரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் பி.கே.மூக்கையாத் தேவரின் சிலைக்கு பாஜக சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துரை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் வினோத்குமார், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் தீபா செல்லப்பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகி.!

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தலைமையில், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் எஸ்.எம் ரபீக் முன்னிலையில், ரஜினி மன்ற நிர்வாகி அனுப்பானடி அண்ணா. முருகானந்தம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

உடன் பகுதி கழக செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், மேற்கு 1-ஆம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.விஜயபாஸ்கர், வடக்கு 2-ம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.M.முத்துப்பாண்டி ஆகியோர் இருந்தனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தேனியில் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் டாக்பியா-வின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகள் மற்றும் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி தரக்கோரும் கோரிக்கைகள் உட்பட 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக இன்று 03.04.2023 திங்கள்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி சிறப்பாக நடந்தது.

இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் டாக்பியா சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக சிறப்பாக நடந்தேறியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டத்தின் டாக்பியா-வின் முன்னால் மாவட்ட செயலாளரும் டாக்பியா ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான திரு.A.M.ஆசிரியத்தேவன் அவர்களின் சீரிய தலைமையிலும் மாவட்ட தலைவர் திரு.K.அருணகிரி, மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.K. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தது.

இதில் மாவட்ட துணை தலைவர்கள் திரு.K.சரவணன், திரு.V.M.பாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர்கள் திரு.S.செல்லாண்டி, திருமதி.S.வனிதா ஆகியோரும் டாக்பியா ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் திரு.K.முருகன், திரு.முருகேசன் அவர்களும் போராட்ட குழு செயலாளர் திரு.P.மணிகண்டன் தலைவர் திரு.M.காளிப்பாண்டியன் கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் தேனி மாவட்டம் ஆகியோரும் கலந்து முழுவதிலும் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்

நிறைவாக மேற்கண்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சில மாவட்டங்களில் பயிர் கடன் பட்டுவாடாவில் விதிமீறல் என்று கூறி பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விளக்கிக்கொள்ளப்பட வேண்டும். பயிர் கடன், நகை கடன், மகளிர்குழு கடன், அனைத்திற்கும் உரிய தொகையினை வட்டி இழப்பின்றி வழங்க வேண்டும்.

தவனை தவறிய நகை கடன் மீது ஏல நடவடிக்கை செய்யப்பட்ட இழப்பு தொகையினை எவ்வித நிபந்தனையும் இன்றி சங்கத்தின் நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்,

செயலாளர் பணிமாறுதளுக்கான பொது பணி நிலைத்திறன் அடிப்படையில் பணி செய்வதால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை மாறுதல் நீக்கக்கோருதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தரும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்ப்பித்தனர்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக தேனியில் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைகளுக்கு தீர்வு ஏற்படுத்த தரக்கோரியும் கோரிக்கைகள் உட்பட்ட 12 அம்ச கோரிக்கை தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் டாக்பியா சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்டத்தின் டாக்பியா முன்னாள் மாவட்ட செயலாளரும், ஓய்வு பெற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் ஆசிரியதேவன்
தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அருணகிரி,
மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள், விற்பனையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சில மாவட்டங்களில் பயிர் கடன் பட்டுவாடாவில் விதிமுறைகள் என்று கூறி பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பயிர் கடன், மகளிர் குழு கடன் அனைத்திற்கும் உரிய மீது ஏல நடவடிக்கை செய்யப்பட்ட இழப்புத் தொகையினை எவ்வித நிபந்தனை இன்றி சங்கத்தின் நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

செயலாளர் பணி மாறுதலுக்கான பொது நிலை திறன் அடிப்படையில் பணி மாறுதல் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும். என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக மதுரையில் பேரணி.!


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரியில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

இதுகுறித்து சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில் :- பல்வேறு சிரமங்கள், பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 03.04.2023 இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் மனு அளிக்கிறோம்.

எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 24.04.2023 அன்று தமிழகத்தில் உள்ள 4400 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள், விற்பனையாளர்கள் குடும்பத்துடன் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது என்றும், மாநில தொழிற்சங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 170 சங்கங்களின், பணியாளர்கள், ரேசன்கடை விற்பனையாளர்கள் 700 பேர் இன்று மதுரையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டோம் என கூறினார். எங்களது கோரிக்கைகள்
1.பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கடன் தள்ளுபடி தொகைகளை முழுமையாக வட்டியுடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

கடன் தள்ளுபடியில் விதிமீறல் நகைக்கடன் ஏல நடவடிக்கைகளில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களின் ஓய்வு கால பலன்களை நிறுத்தி பழிவாங்குவது கைவிடப்பட வேண்டும்.

செயலாளர் பொதுப்பணிநிலைத்திறனில் குறைகள் களையப்படவேண்டும்.
ரேசன்கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சனைகள் இன்னல்கள் தீர குழு அமைத்து தீர்க்கப்பட வேண்டும்.
பல்நோக்கு சேவை மைய திட்டத்தில் சங்கங்களை நட்டத்திற்குள்ளாக்கும் வகையில் தேவையற்ற உபகரணங்களை வாங்க நிர்ப்பந்திப்பது நிறுத்தப்பட வேண்டும்.

நகர கூட்டுறவு கடன் சங்கப்பணியாளர்களுக்கு அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கை விரைவில் பெற்று புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு புதிய ஊதியக்குழு உடனே அமைத்திட வேண்டும்.

தணிக்கைத்துறையின் கட்டுப்பாடற்ற போக்கை தடுத்திட கூட்டுறவு தணிக்கைத்துறையை கூட்டுறவுத்துறையின் பதிவாளர் தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அல்லது பட்டயத்தணிக்கைக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

அனைத்து பணிநிலைக்கும் பணிமூப்பு பட்டியல் தயாரித்து பதவி உயர்வுகள் உடன் வழங்கப்பட வேண்டும்.
10.தொலைதூரங்களில் பணியாற்றும் ரேசன்கடை பணியாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அருகாமையில் உள்ள பணியிடங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

அங்காடிகளுக்கு பொருட்கள் எடை குறைவின்றி வழங்க வேண்டும்.
12.கேரளாவில் உள்ளது போன்று கூட்டுறவு சங்கப்பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். என கூறினார்.

மதுரை சம்மட்டிபுரத்தில் ஆர்.ஜே தமிழ்மணி டிரஸ்ட் சார்பாக பொது மருத்துவ முகாமை செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள பிள்ளைமார் பள்ளியில் ஆர்.ஜே தமிழ்மணி சாரிட்டபிள் அன் எஜிகேஷனல் டிரஸ்ட் சார்பாக 35- வது இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்ட் செயலாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச் செயலாளருமான கணேஷ்பிரபு, திருமதி ரம்யா கணேஷ்பிரபு விபின்சாகர், விஷ்ணுசாகர், வருண்சாகர் மற்றும் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் பைகாரா கருப்பசாமி, பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி, பி‌.கே.எம்.மாரிமுத்து,மாணிக்கம், வட்ட கழக செயலாளர்கள் பஜார் துரைப்பாண்டி, பாவலர் ராமச்சந்திரன், ஐடி விங் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டக்கழக செயலாளர் நாகராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

தினமும் முதியோர்களுக்கு உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!

தானத்தில் சிறந்தது அன்னதானம். இந்த அன்னதானத்தை 378 நாளாக சேவை மனப்பான்மையுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு தெருவில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏழை எளிய முதியோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த 378 வது நாள் அன்னதானத்தை திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன் மற்றும் செயலாளர் சக்கையன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று “மாற்றுத்திறனாளிகளுக்கு விருந்து” வழங்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 40- க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் திருமங்கலம் கவுன்சிலர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஒரு வருடமாக அன்புடன் உபசரித்து உணவு வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளை மாற்றுத்திறனாளிகளும், முதியோர்களும் மனதார பாராட்டினர்.

இந்நிகழ்வில் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சித்ரா ரகுபதி, பொருளாளர் அருள்ஜோதி, கௌரவ ஆலோசகர்கள் காளியப்பன், அழகர்சாமி, டிரஸ்டி குருபிரசாத், அன்னபூரணி மற்றும் நிர்வாகிகள் லோகேஸ்வரி, அய்யம்மாள், மலர்விழி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி நன்றியுரை கூறினார்.

ரோகினி திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன். மதுரையில் நடிகர் சூரி பேட்டி.!

மதுரை சினிப்ரியா திரையரங்கில் விடுதலை திரைப்படம் வெளியானதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

விடுதலை படத்தை பார்ப்பதற்காக வந்த கதாநாயகன் சூரிக்கு ஆளுயர மாலை அணிவித்து ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை சூரி பார்த்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து சூரி கூறுகையில்:-

நல்ல திரைப்படத்தை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த திரைப்படத்தையும் வெற்றி படமாக கொண்டு செல்வது ரசிகர்கள் தான்.
நான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படத்தை எனது ரசிகர்கள் வெற்றியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ரோகினி திரையரங்கில் நடைபெற்ற அனுமதி மறுப்பு சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சூரி,
எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்த தான் திரையரங்கு வந்தது. நீ நான் என்ற வேறுபாடு திரையரங்கிற்கு கிடையாது.இந்த சம்பவத்திற்கு நான் வருந்துகிறேன் என கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES