Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 3)

உலகம்

World

மதுரை பை.பாஸ் ரோடு அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.!

மதுரை பாத்திமா நகரில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் உதயகுமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை பை.பாஸ் ரோடு பாத்திமா நகரில் கள்ளர் குல தொண்டைமான் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் 61-வது உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அன்று நடந்த வில்லிசை நிகழ்ச்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களும், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சனிக்கிழமை அன்று நடந்த கும்மி பாட்டு நிகழ்ச்சியை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன் ஜி மற்றும் வடக்கம்பட்டி வி.பி.எம் பட்டாசு கம்பெனி உரிமையாளர் துரைப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த மாபெரும் அன்னதானத்தை குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் மற்றும் சட்ட ஆலோசகர் உதயகுமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி தலைவர் பொன்னையா, செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் சங்கர் மற்றும் விழா அமைப்பாளர்கள் அந்தோணி முத்துராஜ், அழகர்சாமி, கோவிந்தராஜ், ஆனந்தகுமார், பிரதீப்மல்லிராஜ், சண்முகம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு நீர்,மோர் பந்தல் திறப்பு விழா.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு கடுமையான கோடை வெயிலை முன்னிட்டு, அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு நீர்,மோர் பந்தலை திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக நகரச் செயலாளரும், தொழிலதிபருமான மு.சி.சோ.பா ஸ்ரீதர் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதா பழனிமுருகன் தலைமை வகித்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி வரவேற்று பேசினார்.

திருமங்கலம் நகர் வளர்ச்சி ஆலோசனை குழு நிர்வாகிகள் சிவக்குமார், சங்கரன், பார்த்தசாரதி, இருளப்பன்,சக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கவுன்சிலர்கள் மச்சவள்ளி செல்வம், வினோத் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் சித்ரா ரகுபதி, அருள்ஜோதி, காளியப்பன், அழகர்சாமி, குருபிரசாத், அன்னபூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக சிலம்பம் பயிற்சி பள்ளி தொடக்க விழா.!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 385 நாட்களுக்கும் மேலாக ஆதரவற்ற முதியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளின் மற்றுமொரு முயற்சியாக அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பம் பயிற்சி பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமை வகித்தார்.
திருமங்கலம் மக்கள் நல சங்கத் தலைவர் சக்கையா, செயலாளர் இருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இறையன்பு நூலகம் பார்த்தசாரதி, வழக்கறிஞர் ராஜசேகரன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர் மருதுபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் காளியப்பன், அழகர்சாமி, அருள்ஜோதி, ஆறுமுகம் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை டிரஸ்ட் துணைச் செயலாளர் ரகுபதி வரவேற்று பேசினார்.
இதில் சிலம்பம் முதன்மை பயிற்சியாளர் முத்துக்குமார், ஆண்கள் சிலம்பம் பயிற்சியாளர் ராஜா, பெண்கள் பயிற்சியாளர் கரிஷ்மா மற்றும் நிர்வாகிகள் குருபிரசாத், அன்னபூரணி, தேன்மொழி, மலர்விழி, ரோகுபாண்டி, கணேசன், அய்யம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக மதுரையில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர்.பாரிஸ் ஆலோசனைப்படி, தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு தலைமையில்
மதுரை கீரைத்துரையில் ஜோதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு
மதிய உணவு வழங்கப்பட்டது.


இந்நிகழ்விற்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார் முன்னிலை வகித்தார்.


இதில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி கஜேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ஷர்மிளாபானு, மாநில இணைச்செயலாளர் பிரகாஷ்,மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் பவர் ராஜேந்திரன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயராஜா,வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, முருகேசன்,
இணைச் செயலாளர்கள் பால் முனீஸ்வரன், வீரமணி பிரபு, மாநகர் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி நாச்சியம்மாள், மாநகர் மகளிர் அணி தலைவி அனிதா ரூபி, மகளிரணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வரும் பன்னாட்டு சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் ஏற்பாட்டில் இலங்கை வவுனியா,குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் 35 பேருக்குத் தேவையான புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சோழன் நிறுவனத்தின் இலங்கை கிளை தலைவர் முனைவர். யோகதாசன் யூட் நிமலன்,வவுனியா மாவட்டத் தலைவர் பாக்கியநாதன் லம்போதரன் போன்றோர் மாணவ,மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்கள்.

சோழன் நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து கிளை தலைவர் மணிசேகரன் மற்றும் இத்தாலி நாட்டில் வசித்து வரும் கீரன் குலதுங்கசேகரம் ஆகியோர் அனுசரனையில் இப்பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா.!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.

விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் பி.மூர்த்தியை வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரத் சீமான்,
இயக்குனர்கள்
சபரி, பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.

தென்னிந்தியாவில் 45 கிளைகளை கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 1656 மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் தி இந்து பத்திரிக்கையின் முதுநிலை மேலாளர் சங்கர் சூரிய நாராயணன், நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தின் எடிட்டர் தியாக செம்மாள், மதுரை வைகை எஜுகேசனல் டிரஸ்ட் தாளாளர் திரு செந்தூரன், வீராந்ரா ரேஸ் தலைமை நிர்வாகி விக்னேஸ்வர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினர்.நிகழ்ச்சியின் முடிவில்
ராமரத்தினம் நன்றியுரை கூறினார்.

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா.!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் 11-வது வெற்றி விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.

விழாவிற்கு வருகை தந்த அமைச்சரை
வீராந்ரா ரேஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரத் சீமான்,
இயக்குனர்கள்
சபரி, பிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினர்.

தென்னிந்தியாவில் 45 கிளைகளை கொண்ட இந்நிறுவனத்தில் சுமார் 1656 மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் தி இந்து பத்திரிக்கையின் முதுநிலை மேலாளர் சங்கர் சூரிய நாராயணன், நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தின் எடிட்டர் தியாக செம்மாள், மதுரை வைகை எஜுகேசனல் டிரஸ்ட் தாளாளர் திரு செந்தூரன், வீராந்ரா ரேஸ் தலைமை நிர்வாகி விக்னேஸ்வர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறப்புரை ஆற்றினர்.நிகழ்ச்சியின் முடிவில்
ராமரத்தினம் நன்றியுரை கூறினார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது.!

மதுரையில் கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஐய்யப்ப ராஜா தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர்கள் அருள் தமிழரசன், நிரஞ்சன் குமார், மாநகர் பொறுப்பாளர் அமிழ்தன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ராமராஜ், ஜெயமுருகன் மற்றும் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார், சிவநந்தினி, ஆகாஷ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது.!

மதுரையில் கோடை வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஐய்யப்ப ராஜா தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர்கள் அருள் தமிழரசன், நிரஞ்சன் குமார், மாநகர் பொறுப்பாளர் அமிழ்தன், மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ராமராஜ், ஜெயமுருகன் மற்றும் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார், சிவநந்தினி, ஆகாஷ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்கே செல்கிறது அரவக்குறிச்சியின் எதிர்காலம்?

கரூர் மாவட்டத்தில் முக்கியமான தாலுகா அரவக்குறிச்சி ஆகும் இன்றுவரை அது பெயர் அளவில் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் செயல்படுவது போல மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள்…

அரவக்குறிச்சி மக்களின் எதிர்பார்ப்புகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது அதை கண்டித்து கேட்பவர்களையும் நிராகரித்து வருவதும் கடந்த சில நாட்களில் பத்திரிக்கையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன…

அப்படி என்னதான் அரவக்குறிச்சி மக்களின் கோரிக்கைகள் இருக்கும்?

அரவக்குறிச்சி தாலுகாவில் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கொண்டு வரப்படுமா?
நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவார்களா?, கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கொடுப்பார்களா?, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சொந்த கட்டிடத்திற்கு கொண்டு செல்வார்களா?, மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் அரவக்குறிச்சிக்கு கிடைக்குமா?, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருமா?,
சார் பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்டி திறக்கப்படுமா?, நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே கணக்கு பிள்ளை புதூரில் உள்ள தடுப்பணை தூர் வாரி நீர் ஆதாரம் சேமிக்கப்படுமா?, நங்காஞ்சி ஆற்றின் கடைமடை கரடிப்பட்டியில் தடுப்பணை கட்டப்படுமா?, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?, அரவக்குறிச்சிக்குள் செல்லும் சாலைகள் சீர் செய்யப்படுமா?

இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் மக்கள் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர்….

இது போன்ற செயல்களை அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் எந்த அளவில் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அரவக்குறிச்சியின் எதிர்காலம் அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை…

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES