Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 2)

உலகம்

World

மத்திய மாநில அரசு-பெட்கிராட் இணைந்து நடத்தும் DDU-GKY திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

மத்திய மாநில அரசு – பெட்கிராட் இணைந்து நடத்தும் DDU-GKY திட்டத்தில் தையல் பயிற்சி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையிலும், பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, கிருஷ்ணவேணி, சாராள்ரூபி ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் அங்குசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர்/திட்ட அலுவலர் காளிதாசன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றும் போது :-

தையல் பயிற்சியை முடித்துவிட்டு தையல் தொழிலை துவங்கி தொடர்ந்து வருமானத்தை பெருக்க வேண்டும், தொழில் முனைவோராக வளரவேண்டும். சுயதொழில் துவங்க மத்திய – மாநில அரசுகள் பல்வேறு மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வாய்ப்பை பயன்படுத்தி தடைகளை தாண்டி சாதனையாளர்களாக மாறவேண்டும் என பேசினார்.

மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் செந்தில்குமார், மேற்கு தாசில்தார் நாகராஜன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னதுரை,அலுவலர் பொன்னையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பெட்கிராட் துணைத்தலைவர் மார்ட்டின்லூதர்கிங் வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை தத்தனேரியில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் செயற்குழு கூட்டம்.!

மதுரையில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் செயற்குழு கூட்டம் தத்தனேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைத் தலைவர் வினோத்குமார், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் ரிஷி, தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மண்டல் பொதுச் செயலாளர்கள் சண்முகவேல் முருகன், விஜயன், மண்டல் துணைத் தலைவர் சுப்பிரமணி, லட்சுமணன், முருகேசன், மண்டல் செயலாளர் சிவா, மண்டல் பொருளாளர் துரைப்பாண்டி உள்பட கிளை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பாஜக பாலரெங்காபுரம் மண்டல் செயற்குழு கூட்டம்.!

மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில் கான்பாளையம் 4-வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக பாலரெங்காபுரம் மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ரௌத்திரன் ஜெகதீஸ், மாநில மகளிரணி செயலாளர் மீனாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி, முன்னாள் மண்டல தலைவர் ஜே.கே ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் சதன் பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் ரோஜா ராணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாலன், மண்டல் பொதுச்செயலாளர்கள் பிரதீப் குமார்,சஞ்சய், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் செல்வ அருண்குமார், மண்டல துணைத் தலைவர்கள் கலா, தினேஷ், அம்பரீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை கோ.புதூர் கற்பகநகரில் சாந்தி நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவில் டாக்டர் சரவணன் பங்கேற்பு.!

மதுரை கோ.புதூர் கற்பகநகரில் உள்ள விஷ்வா ரெசிடென்சியில் சாந்தி நினைவு அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தாய் மூகாம்பிகை பிராபர்ட்டிஸ் (பி) லிமிடெட் நிர்வாக இயக்குநர் சேதுராமன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சாந்தி நினைவு அறக்கட்டளை நிறுவனர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்

இந்நிகழ்வில் நரிமேடு சரவணா மருத்துவமனை சேர்மன், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் மற்றும் வணிக வரித்துறை இணை ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஸ்ரீ சிவசக்தி புரமோட்டர், விஷ்வா சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ் உரிமையாளர் ரகுநந்தன் மற்றும் ஜெயவிஸ்வதர்சன் ஆகியோர் நிதிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் பெருங்குடி ஸ்ரீ கிருஷ்ணா பிராபர்ட்டிஸ் உரிமையாளர் இளங்கோ மற்றும்
பார்த்திபன் ஆகியோர் நன்றியுரை கூறினர்.

மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் பேசுகையில்:- இந்த சாந்தி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். எனவே இந்த அறக்கட்டளைக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் என கூறினார்.

இதுகுறித்து ஜெயவிஸ்வதர்ஷன் கூறுகையில் :- சாந்தி நினைவு அறக்கட்டளை தொடக்க விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள் 25 பேரின் முழு கல்விச்செலவையும் அறக்கட்டளையின் சார்பாக ஏற்றுக் கொண்டு கல்வி கற்க உரிய ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

மேலும் கணவனை இழந்த விதவைகள் 20 பேரின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை அறக்கட்டளையின் சார்பாக மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பாஜக எஸ்.எஸ் காலனி மண்டல் செயற்குழு கூட்டம்

மதுரையில் பாஜக எஸ்.எஸ் காலனி மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு மண்டல் தலைவர் மக்கள் சேவகன் எஸ்.ஆர்.எஸ் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மண்டல் பொதுச் செயலாளர் கே.என் பிரகாஷ் நன்றியுரை கூறினார். நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தி யாளர் கனகராஜ்

மதுரை முனிச்சாலையில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா.!

மதுரை முனிச்சாலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கல்யாண மஹாலில் ஸ்ரீம் சேவா டிஜிட்டல் எக்ஸ்-ரே திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் கோகுல்நாத் பிரேம்சந்த் தலைமை வகித்தார்.

டாக்டர் பி.ஆர்.ஜே கண்ணன் முன்னிலை வகித்தார். டாக்டர் பாலகிருஷ்ணன் ஆத்மாராம் மற்றும் நிர்மலா ஆத்மா ராம் குடும்பத்தினர் டிஜிட்டல் எக்ஸ் ரே இயந்திரத்தை உபயமாக வழங்கினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் சுதர்சன், டாக்டர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.பி.ஏ உப தலைவர் ஜீயர் பாபு, காரியதரிசி யோகேஷ் மற்றும் கே.ஆர் யோகேஸ்வரன், டிரஸ்ட் பொருளாளர் டி.கே.டி கிருஷ்ணன், டிரஸ்டி கிரிதர்பாபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை டிரஸ்டி முரளிதரன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஆடிட்டர் விசுவநாதன் நன்றி உரை கூறினார். இங்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள்.!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதுரையில் ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள்

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக தேசிய இயக்குனர் சர்க்கார் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரிஸ் ஆலோசனைப்படி பேரிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.கா.கவியரசு மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார், மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சின்னசாமி ஆகியோர் தலைமையில் மூன்றுமாவடி அருகே உள்ள சர்வேயர் காலனியில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் சாலை ஓரமாக வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் டாக்டர்.கஜேந்திரன், மாநில துணைத்தலைவி திருமதி.குரு லட்சுமி கஜேந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் பவர்.ராஜேந்திரன், வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஷேக்அப்துல்லா, வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் பூமிநாதன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வம், துணைச்செயலாளர் வீரமணிபிரபு ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டினியாக யாரும் இருக்கக் கூடாது என்ற கொள்கையை பின்பற்றி ஏழைகளுக்கு உணவு வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்…

கரூர்.27-05-23.

கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமராக பொறுப்பேற்றவர் ஜவர்கலால் நேரு. இவர் 1964 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிரதமராக இருந்தபோதே காலமானார். 1889-ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த ஜவகர்லால் நேரு குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வந்ததால் அவரது பிறந்த நாள் குழந்தைகள் தினமாக இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகள் இடையே சமாதானத்தை போற்றும் வகையில் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்து அதனை செயல்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு.

இன்று இவரது 59 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடெங்கும் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் மேற்கு பகுதியில் செயல்படும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் வடக்கு நகர தலைவரும், மாநகராட்சி உறுப்பினருமான ஸ்டீபன் பாபு தலைமையில் ஜவகர்லால் நேரு அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகரத் தலைவர் வெங்கடேஷ், கிழக்கு நகர செயலாளர் சண்முகசுந்தரம், கண்ணப்பன், வழக்கறிஞர் அணி தலைவர் முகமது அலி, தொழில்நுட்ப அணி தலைவர் க.பாலமுருகன், B.E., தொழில்நுட்ப அணி செயலாளர் சாகுல் ஹமீது கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

உ.பி.காட்டுத் தர்பார் ஆட்சியில் நிகழும் என்கவுண்டர் கொலைகள்…

உ.பி.
காட்டுத் தர்பார் ஆட்சியில் நிகழும் என்கவுண்டர் கொலைகள்,
கொலைகள் குறித்து உயர்மட்ட சட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

கரூர்.தமிழ்நாடு.
முன்னால் எம்பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் முன்னால் எம்.எல்.ஏ. அஷ்ரப் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்டிருப்பது
உ.பி. அரசாங்கத்தின் சட்டமீறல் மற்றும் முழுமையான தோல்வி குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இதேபோல், உத்தரபிரதேச காவல்துறையினரால் அதிக் அகமது மகன் அஸத் அகமது மற்றும் குலாம் முகமது ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சட்டம் மற்றும் நீதித்துறை மீதான குடிமக்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளது.

நீதித்துறை உத்தரவின் பேரில் காவல்துறையின் முழுப் பாதுகாப்புடன் அதிக் அகமது மற்றும் அஸத் அகமது இருந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் எப்படி இவ்வளவு அருகில் சென்று அவர்களைக் கொலை செய்தார்கள் என்பது நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.

உ.பி.யில் வழக்கமாக அதிக எண்ணிக்கையிலான போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் நிலைமைகளை அறியவும், நியாயமான விசாரணையின்றி அவர்களை என்கவுன்டரில் கொல்லவும், அஸத் மற்றும் குலாம் ஆகியோரை குற்றம் நிரூபிக்கப்படாமல் கொல்லவும் காவல்துறைக்கு அதிகாரம் அளித்தது குறித்தும் பாரபட்சமற்ற மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

உ.பி.யில் முதல்வர் யோகியின் தலைமையின் கீழ் நடக்கும் இந்தக் கொலைகள் வழக்கமாக நீண்ட பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.
13 நாட்களுக்கு ஒருவர் என்கவுண்டர் மூலம் அகற்றப்பட்டுள்ளது என்று மீடியாக்களுக்கு பெருமைப்படுத்த பொய்யான
என்கவுன்டர்கள் மூலம் நடத்தப்படும் கொலைகள் நீதிமன்றங்களையும் நீதித்துறை அமைப்பையும் அர்த்தமற்றதாக ஆக்குகிறது. ஜனநாயகத்தில் நீதிபதியாகவும், நிர்வாகியாகவும் காவல்துறை செயல்படவும், அளவுக்கு மீறி செயல்படவும் அனுமதிக்கப்படக் கூடாது.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்ட பார்வையில் இந்த என்கவுன்டர் போலியானது மற்றும் திட்டமிட்ட அரசியல் கொலையாகத் தெரிகிறது, அதே நேரத்தில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரரின் மீதான தாக்குதல் வீடியோ கிளிப்புகள் பாஜகவின் கீழ் இயங்கும் மாநிலத்தின் மோசமான சட்டம் ஒழுங்கை காட்டுகிறது. குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசு முற்றிலும் தோல்வியடைந்ததற்கு உ.பி. அரசாங்கம் ஒரு தெளிவான உதாரணம். காவல்துறை பாதுகாப்பு எல்லைகளுக்கு அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை என்பதையும், கொலையாளிகளைத் தடுக்கவோ அல்லது எதிர்க்கவோ அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதையும், அதன் பிறகு அவர்கள் சினிமா பாணியில் தம்மை நாயகர்களாக காட்டிக் கொள்ளும் வகையில் சரண் ஆவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. ஆகவே இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., கொலை வழக்கில் முழுமையான விசாரணை தேவை.

இப்படுகொலைகளை நிகழ்த்திய மூன்று குற்றவாளிகளையும், உமேஷ் பால் கொலை, அஸத் மற்றும் குலாம் ஆகியோரின் என்கவுன்டர் மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., கொலைகள் உள்ளிட்ட மூன்று குற்றச் சம்பவங்களையும் ஒன்றாக இணைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும். சமூகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்கான கண்காணிப்பின் கீழ் நீதித்துறை ஏற்பாடுகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
கொலையாளிகள் கொலையில் ஈடுபடும் பொழுது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழுங்குவது அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை தூண்டிவிடும் செயல்கள் மற்றும் அவர்களுடன் கலந்து வாழும் சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயல் தூண்டி விடப்பட்டுள்ளது எனவே இச்செயல் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன்னிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்

மேலும், காவல்துறை முன்னிலையில் நடந்த கொலைகள் மற்றும் காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட என்கவுண்டர் கொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
க.முகமது அலி. வழக்குரைஞர்.
இந்திய தேசிய காங்கிரஸ்.

மதுரையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர், EX.கவுன்சிலர் சுப்புராம் தலைமையில் திருமண விழா.!

மதுரையில் பெட்கிராட் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான சுப்புராம் அவர்களின் தலைமையில் திருமண விழா நடைபெற்றது.

மதுரை மகபூப்பாளையம் சுகுணா திருமண மஹாலில் சி.பி.ஐ.எம் பகுதி செயலாளர் சேதுராமன் மற்றும் சீனிவாசன், முருகேஸ்வரி இல்லத் திருமண விழா பெட்கிராட் தொழில் பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், கவுன்சிலர்கள் மகாலெட்சுமி, ஜென்னி அம்மாள், முன்னாள் கவுன்சிலர் கார்னர்.பாஸ்கர், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் ஸ்டாலின், திமுக வட்டச் செயலாளர் அழகுசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் டி.ஜே.மனோகரன், ஜான்சன்,லாரன்ஸ், மதிமுக வட்டச் செயலாளர்கள் ஜெப்ரி, ஆட்டோ சுடலை மணி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், காமராஜ், ஸ்ரீ காணியாளன் பொன் முனியாண்டி சுவாமி கோவில் செயலாளர் ஏ.பி.குமார், உதவி செயலாளர் அருணகிரி, பொருளாளர் மும்பை ஆர்.கண்ணன், இணைச்செயலாளர் ராஜசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் சதீஷ்குமார் – பானுப்பிரியா ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES