திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை நகைகளை உருக்குவதற்காக பிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்குவதற்கு வசதியாக பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் பயன்பாடற்று இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய …
Read More »விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்
தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வந்த ராட்சசன், எப்.ஐ.ஆர்., கட்டா குஸ்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். சில …
Read More »நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் – நடிகை சமந்தா
நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றார். தெலுங்கில் குஷி படப்பிடிப்பிலும் இணைய இருக்கிறார். கடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் நோய் பாதிப்பில் இருந்து சமந்தா பூரணமாக குணமடைந்து விட்டதாக தகவல் பரவியது. …
Read More »இன்று நாடாளுமன்றத்தில் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்…
ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும். இன்று (28-03-2023) நாடாளுமன்றத்தில் *தலைவர் ராகுல் காந்தி அவர்களின்* தகுதி நீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்புத் தீர்மானம் *நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள்* கொடுத்துள்ளார்.
Read More »இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருகிறோம் – அமெரிக்கா
இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக …
Read More »பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து
பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் இந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் உள்ள மின்பெட்டியில் தீ்ப்பிடித்து எரிந்தது. …
Read More »சென்னை: கே.கே.நகர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
சென்னை கே.கே. நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. சென்னை, சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கல்லை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. கொள்ளை முயற்சியின் போது ஆந்திராவில் உள்ள ஏடிஎம் கட்டுப்பாட்டு மையத்தில் அலாரம் ஒலித்ததால் உடனடியாக சென்னை போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்த …
Read More »நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி – சென்னையில் விமானம் அவரசமாக தரையிறக்கம்
விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னை, அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் …
Read More »“மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?” – சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார். சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது …
Read More »அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு …
Read More »