தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 58,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேள்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 24,42,482 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 2,34,114 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,927 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 1,72,883 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது.இன்று சென்னையில் 1,117 பேருக்கும், செங்கல்பட்டில் 540 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 373 பேருக்கும், திருநெல்வேலியில் 382 பேருக்கும், தூத்துக்குடியில் 316 பேருக்கும், விருதுநகரில் 370 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanks to : news 18