சேலம் மேட்டூரில் துக்க நிகழ்வில் பங்கேற்ற மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பண்ணவாடியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும், ஊருக்குள் மளிகைக் கடைகளை வழக்கம் போல் திறந்துவைக்கபட்டுள்ளதால், சமூக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்களில், 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று மேலும் இந்த துக்க வீட்டில் கலந்து கொண்ட 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Thanks To: News 18