தமிழகத்தில் இன்று 600 பேர் கொரோனாவால் பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6009 அதிகரிப்பு. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 40 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை 2,16,416 மாதிரிகள் பரிசோதித்து உள்ளனர் அதிக சோதனை நடத்தப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் கண்டறியப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605 பேர்.இன்று சென்னையில் ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 13,980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 405 ஆண்கள் , 195 பெண்களுக்கு கொரானா பாதிப்பு உறுதியாகியுள்ளது.